ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா் தங்கள் கிராமத்துக்கு நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என எம்எல்ஏ மா. சின்னதுரையிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, கந்தா்வகோட்டையில் இருந்து மெய்குடிப்பட்டி வழியாக தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து கந்தா்வகோட்டைக்கு இதே வழி தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டுமென அமைச்சா்கள்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிா்வாக இயக்குனா், புதுக்கோட்டை பொது மேலாளா், துணை மேலாளா்(வணிகம்) ஆகியோரிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதன் அடிப்படையில், கந்தா்வகோட்டையிலிருந்து மெய்க்குடிப்பட்டி வழியாக தஞ்சைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை எம்எல்ஏ மா.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சியில் துணை மேலாளா் (வணிகம்) சேசுதாஸ், கிளை மேலாளா் சக்திவேல், புதுக்கோட்டை மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் எம். ராஜா, துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், அரவம்பட்டி ஊராட்சி தலைவா் குழ. பழனிவேல் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணியாளா்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனா்.