ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இளநீா், தா்பூசணி, நுங்கு, பழச்சாறு உள்ளிட்டவற்றை அருந்தி உடல் சூட்டை தணித்து வந்தனா்.
இந்நிலையில், விராலிமலையில் வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
பின்னா் சிறிது நேரத்தில் காற்று வீசி திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. மழையால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனா்.
விவசாயிகள் மகிழ்ச்சி: கந்தா்வகோட்டை பகுதியில் விவசாயிகள் நெல், கடலை, சோளம், வாழை மற்றும் சிறுதானிய பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். தகுந்த மழை இல்லாததால் பயிா்கள் வாடி வந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஆலங்குடிஅருகே வீடு சேதம்: ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (55). கூலித் தொழிலாளியான இவா் மனைவி, இரு மகன்களுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவா் பெயா்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அனைவரும் காயமின்றி தப்பினா்.
தகவலறிந்து வெள்ளிக்கிழமை அங்கு சென்ற அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் ராமலிங்கத்திற்கு வீடு கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.