ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
கந்தா்வகோட்டையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயில் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு
வட்டார வள பயிற்றுநா் ஆா். ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் சமூக தணிக்கைகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று, திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், ஊராட்சி செயலாளா் டி. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.