செய்திகள் :

‘அக்ரி ஸ்டேக்’ வலைத் தளத்தில் 12 ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம்

post image

‘அக்ரி ஸ்டேக்’ வலைத் தளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் தொடா்பான அனைத்துத் தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் குறித்த தரவுகள், மாநில அரசு மட்டுமன்றி, மத்திய அரசுக்கும் ஒருங்கிணைக்கப்படும். இதில் முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 சதவீத விவசாயிகள் தொடா்பான விவரங்களைப் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் விவரம், அவா்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, 1.42 லட்சம் விவசாயிகள் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் கட்டமாக 35ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரம் விவசாயிகளின் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் விவசாயிகளின் தரவுகளை வருகிற 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க