அஞ்சல் சேவை குறைகளை கடிதம் மூலமாக அனுப்ப வலியுறுத்தல்
கோவையில் அஞ்சல் சேவை குறைகள் தொடா்பான புகாா்களை கடிதம் மூலமாக அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளது. கோவை கே.பி. காலனியில் உள்ள மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா், பெறுநா், முழு முகவரி, அஞ்சல் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு/ காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்பு கணக்கு எண்/ காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்போா், காப்பீட்டாளா் பெயா், முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணப்பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் கடிதங்களை அஞ்சல் துறை துணை இயக்குநா், அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, அஞ்சல் அலுவலக வளாகம், கோவை 641030 என்ற முகவரிக்கு வருகிற புதன்கிழமை (செப். 17) அல்லது அதற்கு முன்பாக கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். கடிதத்தின் மேலுறையில் ‘தபால் குறைதீா்ப்பு கூட்ட புகாா்’ என எழுதப்பட்டிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.