நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர...
அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவா் கைது
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள மருதவனத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா், தனது டிராக்டரை திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியனிடம் (45) அடகு வைத்து ரூ.1.75 லட்சம் பெற்றாா். 6 மாதம் கடந்த நிலையில் விக்னேஷ், பாண்டியனிடம் டிராக்டரை அடகிலிருந்து மீட்பதற்காக கேட்டுள்ளாா். அதற்கு பாண்டியன், விக்னேஷின் டிராக்டரை கோவில்வெண்ணி மண்ணலூரைச் சோ்ந்த நவீனிடம் (40) அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து விக்னேஷ் நவீனிடம் கேட்டப்போது, ரூ.2.30 லட்சத்துக்கு அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விக்னேஷ், பாண்டியனை அழைத்துக்கொண்டு கோவில்வெண்ணிக்கு நவீனை சந்திக்க சென்றபோது, அங்கிருந்து பாண்டியனும், நவீனும் தப்பி சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமலை மாவட்டம், சேதுப்பட்டு அடுத்த கொள்ளக்கோட்டை மேட்டுதெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் பாரதியிடம் (41) டிராக்டரை விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து இ. பாரதியை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.