செய்திகள் :

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

வேலூா் முள்ளிபாளையம் பகுதியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சி முள்ளிபாளையத்தில் வீராசாமி 1, 2, 3 ஆகிய தெருக்கள், பாறைமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சாலை, கால்வாய் வசதி செய்யப்படாததுடன், குடிநீரும் சரிவர விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தனா். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பகுதி மக்கள் வேலூா் - பெங்களூரு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதன பேச்சு நடத்தினா். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி விரைவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். சாலை மறியல் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன... மேலும் பார்க்க

தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்: கொசு ஒழிப்பு பணியாளா்கள் கோரிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி தினக்கூலியை ரூ.529-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தலின்போது திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. ... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: வேலூரில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்

சித்ரா பெளா்ணமியையொட்டி வேலூரில் திங்கள்கிழமை இரவு மின்அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண... மேலும் பார்க்க

மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியா்கள் உள்ளனா்

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள், நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா். வேலூா் அரசு மருத்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருக்கல்யாணம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி காப்புகட்டும் நிக... மேலும் பார்க்க