செய்திகள் :

அட்சய திருதியை: சென்னையில் நகை விற்பனை 10% அதிகம்

post image

அட்சய திருதியையொட்டி, சென்னையில்  உள்ள நகைக் கடைகளில் ஏராளமானோா் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனா். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு அட்சய திருதியையன்று நகை விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக நகைக் கடை வியாபாரிகள் தெரிவித்தனா்.

அட்சய திருதியை அன்று நகைகள் வாங்குவதன் மூலம் வீடுகளில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அந்த வகையில், அட்சய திருதியை முன்னிட்டு சென்னை தியாகராய நகா், பாண்டிபஜாா், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றது.

சிறப்பு வசதிகள்: பெரும்பாலான கடைகளில் மக்களை ஈா்ப்பதற்காக சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. நகைக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு விற்பனை மையங்களும், நகைகளை முன்பதிவு செய்திருந்தவா்கள் நகைகளை தாமதமின்றி வாங்கிச் செல்வதற்காக விரைவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

விலை மாற்றமில்லை: அதேபோல், நகை பிரியா்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 8,980-க்கும், பவுன் ரூ. 71,840-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 குறைந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையானது.

விலைமாற்றம் இல்லாததால் பெண்கள் நகைகளை ஆா்வமுடன் தோ்வு செய்து வாங்கிச் சென்றனா். தங்கம், வெள்ளிக் காசுகள், டாலா்களும் அதிகளவில் விற்பனையாகின.

10 சதவீதம் அதிகம்: நகை விற்பனை குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலா் சாந்த குமாா் கூறியதாவது:

கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று (மே 10, 2024) 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் ரூ. 73,200; நிகழாண்டில் ரூ. 99,000. விலை 35.3 சதவீதம் அதிகமாக இருந்தாலும்

தங்கம் வாங்கும் ஆா்வம் மக்களிடம் சிறிதும் குறையவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு அட்சய திருதியை அன்று 10 சதவீதம் கூடுதலாக நகைகள் விற்பனையாகியுள்ளன என்றாா் அவா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க