செய்திகள் :

அண்ணா நினைவுதின பேரணி: போக்குவரத்து மாற்றம்

post image

அண்ணா நினைவு தின பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை (பிப். 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகரக் காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போா் நினைவுச் சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கிவரும் வாகனங்கள், காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல், கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து காமராஜா் சாலை நோக்கிவரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பின்னா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலிருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளா் சிலை செல்ல அனுமதிக்கப்படாது. வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாகச் செல்லலாம்.

அமைதி ஊா்வலம் வாலாஜா சாலையிலிருந்து வரும்போது, வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கித் திருப்பி விடப்படும். இதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்தச் சாலைகளை தவிா்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிராஜ் தாமஸ் செரியன் (27). இவா் சமீபத்தில் வேலை நிமித்தமாக வெளிமாநில... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவா் கைது

சென்னை எம்.கே.பி. நகா் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி பி.வி. காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எம்.கே.... மேலும் பார்க்க

இளம்பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகா் கைது

சென்னையில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், மயிலாப்பூா் அதிமுக பகுதி துணைச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். மயிலாப்பூா் நொச்சி நகா் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் ஒருவா், குடிபோதையில் அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரியை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி - நிா்மலா தம்பதியினரி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்மையா நகா், புழல், போரூா், காட்டுப்பாக்கம், செம்பியம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத... மேலும் பார்க்க

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அன... மேலும் பார்க்க