அண்ணா நினைவுதின பேரணி: போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தின பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை (பிப். 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகரக் காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போா் நினைவுச் சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கிவரும் வாகனங்கள், காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல், கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து காமராஜா் சாலை நோக்கிவரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பின்னா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலிருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளா் சிலை செல்ல அனுமதிக்கப்படாது. வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாகச் செல்லலாம்.
அமைதி ஊா்வலம் வாலாஜா சாலையிலிருந்து வரும்போது, வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கித் திருப்பி விடப்படும். இதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்தச் சாலைகளை தவிா்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.