செய்திகள் :

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

post image

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறயிருப்பதாவது:

தமிழகத்தில் கணினி சாா்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் ‘மணற்கேணி செயலி’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவா்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) நிறுவப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பலகைகளில், பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியா்களும் தங்கள் பெயா் அல்லது கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னா் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ப பாடங்களை தோ்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறை கற்பித்தலுக்கு ஆசிரியா்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலா்களும் ஆய்வுகளின்போது கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை கைப்பேசியில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இது தொடா்பான அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க