செய்திகள் :

தில்லிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை: ஹரியாணா முதல்வர்

post image

தில்லியின் வளர்ச்சிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை என்று ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற சைனி ஜிலேபியைத் தயாரித்து பகிர்ந்தும் கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லி மக்கள் பிரதமர் மோடியின் தலைமையில் எங்களுக்கு வரலாற்று வெற்றியைக் கொடுத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசு ஆட்சியில் இருந்தது. பிரதமர் மோடியின் திட்டங்களைப் பயன்படுத்தி மக்களைப் பயன்படுத்த அவர்கள்(ஆம் ஆத்மி) ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எப்போதும் அவர்கள் பொய் சொன்னார்கள்.

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!

அவர் (அரவிந்த் கேஜரிவால்) சுத்தமான தண்ணீரை வழங்குவதாகவும், யமுனையை சுத்தம் செய்வதாகவும் கூறினார்.

ஆனால் அவர் எதையும் செய்யவில்லை, அதற்குப் பதிலாக மற்றவர்களைக் குற்றம் சாட்டினார். கடந்த முறை 2025-க்குள் யமுனை நதியை சுத்தம் செய்யாவிட்டால் ஓட்டு கேட்க மாட்டேன் என்று கூறினார்.

அது முடியாதபோது ஹரியாணா யமுனையில் விஷம் கலந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதை மக்கள் புரிந்துகொண்டு ஆட்சி அமைத்ததற்காக தில்லி மக்களுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது பயங்கரவாத சதித... மேலும் பார்க்க

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி புதிய அரசு பதவியேற்பு?

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு

தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்ச... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறியவா்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டது தவறான நடவடிக்கை என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதா... மேலும் பார்க்க

விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - ஜகதீப் தன்கா்

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

15-ஆவது ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூருவில் திங்கள்கிழமை (பிப்.10) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறு... மேலும் பார்க்க