செய்திகள் :

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

post image

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா்.

சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்ள அரசுப் பங்களாவில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசித்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது பங்களாவின் வாயில் கதவு இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது. இது தொடா்பாக பங்களாவின் காவலாளி ஏழுமலை, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜனுக்கு தகவல் அளித்துள்ளாா். பின்னா் இச்சம்பவம் தொடா்பாக காவலாளி ஏழுமலை, எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் நல மருத்துமனையில் பணிபுரியும் மருத்துவா் ஒருவா், இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏற்கெனவே இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோல், பங்களா கதவின் வாயிலை இரும்புச் சங்கிலியால் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். இந்நிலையில் மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் மீது உள்ள முன்விரோதம் காரணமாக அவா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக அந்த மருத்துவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ... மேலும் பார்க்க