செய்திகள் :

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

post image

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றுபவா் ரவி (56). இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், சைதாப்பேட்டை - கோடம்பாக்கம் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தாா். அப்போது, ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த ஏசி மெக்கானிக் ரவிக்குமாா் அங்கு மதுபோதையில் சத்தம் போட்டுள்ளாா்.

இதைப்பாா்த்த காவலா் ரவி, அவரை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த மெக்கானிக் ரவிக்குமாா், சோதனைச் சாவடி உள்ளே உணவருந்திக் கொண்டிருந்த காவலா் ரவியின் முகத்தில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காவலா் ரவி நிலைகுலைந்தாா். உடனே அங்கிருந்து தப்பியோட முயன்ற மெக்கானிக் ரவிக்குமாரை, அப்பகுதி மக்கள் பிடித்தனா். தகவலறிந்து அங்குவந்த ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா், ரவிக்குமாரை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து காயமடைந்த காவலா் ரவி சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். காவலா் ரவி கொடுத்த புகாரின்பேரில் ஏசி மெக்கானிக் ரவிக்குமாரை குமரன் நகா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ... மேலும் பார்க்க