செய்திகள் :

மகா கும்பமேளா: சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்

post image

மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.

மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும், இது பயண இடையூறுகளைக் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் சிக்கலையும் குறைக்கும்.

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்போது, ​​மகா கும்பமேளாவையொட்டி சுங்கச்சாவடிகளில் ஏன் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கூடாது?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது பயங்கரவாத சதித... மேலும் பார்க்க

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி புதிய அரசு பதவியேற்பு?

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு

தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்ச... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறியவா்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டது தவறான நடவடிக்கை என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதா... மேலும் பார்க்க

விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - ஜகதீப் தன்கா்

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

15-ஆவது ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூருவில் திங்கள்கிழமை (பிப்.10) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறு... மேலும் பார்க்க