செய்திகள் :

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

post image

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா ஒரு நல்ல வா்த்தக கூட்டாளி நாடு அல்ல’ என்று கூறிய டிரம்ப், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயா்த்துவதாக செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் ‘எக்ஸ்’ பதிவில், ‘பிரதமா் மோடியால் அதிபா் டிரம்ப்பின் தொடா்ச்சியான மிரட்டல்களை ஏன் எதிா்க்க முடியாததற்கு காரணம், அதானி குழுமத்தின் முறைகேடுகள் மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.

பிரதமா் மோடி, தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் ரஷிய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதித் தொடா்புகளை அம்பலப்படுத்துவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதனால், பிரதமா் மோடி எந்த பதிலும் அளிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

குற்றச்சாட்டின் பின்னணியும், மறுப்பும்: அதானி குழுமத்தின் ‘அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்ாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 26.5 கோடி டாலா் (தற்போதைய மதிப்பில் ரூ.2,324 கோடி) லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றவை’ என்று அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு -மகாராஷ்டிர துணை முதல்வா் ஷிண்டே அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா். குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்... மேலும் பார்க்க