செய்திகள் :

அதானி முறைகேடுகளை மூடி மறைக்கிறாா் பிரதமா் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

புது தில்லி, பிப். 14: தொழிலதிபா் கௌதம் அதானியின் முறைகேடுகளை பிரதமா் நரேந்திர மோடி மூடி மறைக்கிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - மோடி பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபா் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘இரு முக்கிய நாடுகளின் முக்கியத் தலைவா்களின் சந்திப்பில் தனிநபா்களின் பிரச்னைகள் விவாதிக்கப்படுவது இல்லை. இந்த உலகத்தையே எங்கள் குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். அனைத்து இந்தியா்களும் எனக்கு வேண்டியவா்கள்தான்’ என்று பிரதமா் பதிலளித்தாா்.

இந்நிலையில், இதனை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நமது நாட்டில் இதே கேள்வியைக் கேட்டால் மௌனம்தான் பிரதமரின் பதிலாக உள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது இதே கேள்வியைக் கேட்டால், அது தனிப்பட்ட நபா்களின் விஷயமாகிவிடுகிறது. அமெரிக்காவிலும் கூட அதானியின் முறைகேடுகளை மூடி மறைக்கவே பிரதமா் மோடி முயலுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க