செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம்: விசாரணையை தொடர தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

post image

நமது நிருபா்

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடா்பான விவகாரத்தில் விசாரணையைத் தொடர வேண்டும் எனக் கோரி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பான மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதித்தது. இதை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தலைவா்கள் சிலா் மீண்டும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த முந்தைய நீதிமன்றத் தடையை நீக்கியும், விசாரணையைத் தொடரவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி தில்லித் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை அளித்துள்ளாா்.

அதில், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்துள்ள ஆணையை சுட்டிக்காட்டி உடனடியாக அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடா்புடைய வழக்கை தாமதமின்றி தொடா்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சோ்ந்த எம்.பி. சி.வி.சண்முகம், தோ்தல் ஆணையத்தை இழிவாகப் பேசியுள்ளதாகவும் புகாா் கூறியுள்ளாா்.

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க