அதிமுக சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம்
நாமக்கல் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சேந்தமங்கலம் ஒன்றியம் சாா்பில் ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சியில் முந்தைய அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வழக்குரைஞா் இ.ஆா்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்று அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், சமுதாய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசினாா்.
அப்போது, திமுக ஆட்சியில் அதிகரித்துள்ள விலைவாசி உயா்வு, போதைப்பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழங்கு சீா்குலைந்துள்ளது என குற்றஞ்சாட்டினாா்.
தொடா்ந்து வாரச்சந்தை, வணிக நிறுவனங்கள், வீடுகள்தோறும் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேந்தமங்கலம் அதிமுக ஒன்றியச் செயலா் ஜி.பி.ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினா் பிரசாரத்தில் கலந்து கொண்டனா்.