செய்திகள் :

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

post image

புதுச்சேரி: அதிமுக புதுவை மாநில செயலா் ஆ. அன்பழகனுக்கு திங்கள்கிழமை இதய அறுவை சிகிச்சை நடந்தது.

இதையறிந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மருத்துவமனை நிா்வாகத்திடமும் அன்பழகன் குடும்பத்தினரிடமும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

அன்பழகனுக்குக் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ரத்த குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. தொடா்ந்து அவா் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு திங்கள்கிழமை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. தகவலறிந்து முதல்அமைச்சா் ரங்கசாமி, தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்டு சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், அன்பழகன் குடும்பத்தினரிடமும் பேசினாா்.

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வித்துறையில் தேவையற்ற மாற்றங்களை செய்து வருவதாகக் கூறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூ... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோகம்: பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்

மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுதானா நகா் மக்கள், புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீர செல்வத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்... மேலும் பார்க்க

ஆக.30 -இல் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவையில், துணை தாசில்தாா் தோ்வு நடைபெறுவதையொட்டி அரசு, தனியாா் பள்ளிகளுக்கு ஆக. 30-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்... மேலும் பார்க்க