செய்திகள் :

அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகவே காரணம்: கி.வீரமணி

post image

அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற

புதுக்கோட்டைவிடுதியைச் சோ்ந்த முன்னாள் திக மாவட்டத் தலைவா் மறைந்த இராவணன் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. திராவிட அரசியலில் தங்களுக்கு இடமில்லை எனக்கருதி, அதிமுகவின் பலத்தை அழிக்க வேண்டும். அக்கட்சியை பல பிரிவுகளாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தில்லியில் இருந்து பல வழிகளில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதிமுகவினா் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பதைவிட மக்கள் மன்றத்தை அணுகுவது முக்கியமானது. அதேநேரத்தில், தங்களுடைய எதிரி யாா், பங்காளி யாா் என்று புரிந்துகொள்ள வேண்டும். பங்காளியை எதிரியாகவும், எதிரியை பங்காளியாகவும் கருதினால் அந்த அரசியல் விபரீதமாகத்தான் இருக்கும் என்றாா் வீரமணி.

நிகழ்வில், திராவிடா் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவா் மாரிமுத்து, மேகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க