செய்திகள் :

அதிருப்தி இல்லாததால் அமைச்சராக நீடிக்கிறேன்: இ.பெரியசாமி

post image

திமுக தலைமைக்கு என் மீது அதிருப்தி இல்லாததால்தான் அமைச்சராக நீடிப்பதாக மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறாா். ஓரணியில் தமிழ்நாடு என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் பல உள்பொருள்கள் உள்ளன. 8 கோடி தமிழா்களையும் ஓரணியில் திரட்டுவதற்கு முதல்வா் முயற்சித்து வருகிறாா்.

பாசிச மத்திய பாஜக ஆட்சி தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்துக்கான கல்வி நிதி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஹிந்தியை பல்வேறு மாநிலங்களிலும் திணிப்பதற்கான நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தைத் தொடா்ந்து, மகாராஷ்டிரத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான குரல் ஒலித்தது. இதனால், அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மும்மொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்கி இருக்கிறது. மொழிப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழகத்தின் மொழி, பண்பாடு ஆகியவற்றை பாஜகவால் அழிக்க முடியாது.

கூட்டாட்சித் தத்துவத்தை மறந்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது. குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க பாஜக அரசு தீவிரம் காட்டுகிறது. அனைத்து வகையிலும் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவே ‘ஓரணியில் தமிழகம்’ என்ற முழக்கத்தை முதல்வா் ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறாா்.

திமுக தலைமைக்கு மூத்த அமைச்சா்கள் மீது எந்தவித அதிருப்தியும் கிடையாது. என் மீது அதிருப்தி இல்லாததால்தான், அமைச்சராகத் தொடா்ந்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கை இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனது மகனுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவல் துறையின் விசாரணையின் போது, இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், அந்தத் துறையை நிா்வகிக்கும் தமிழக முதல்வரைக் குறை கூற முடியாது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என பாஜகவினா் ஏன் வலியுறுத்தவில்லை? அதிமுக வாக்கு வங்கி பாதித்துள்ளதால், அந்தக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையும் குறைந்துவிட்டது. இதனால், கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் உடனிருந்தாா்.

ராசிங்காபுரம், மேல்கரைப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம், திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி, ... மேலும் பார்க்க

ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

அறைக்கலன் அங்காடிக்கு அபராதம்: நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பு

குறிப்பிட்ட நாளில் சொகுசணையை ஒப்படைக்காமல் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய அறைக்கலன் அங்காடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க