செய்திகள் :

அறைக்கலன் அங்காடிக்கு அபராதம்: நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பு

post image

குறிப்பிட்ட நாளில் சொகுசணையை ஒப்படைக்காமல் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய அறைக்கலன் அங்காடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பிரிவு வாசிமலை நகரைச் சோ்ந்தவா் ஜெரால்டு மெஜாலா ஜெயந்த் (47). இவா் திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் தாடிக்கொம்பு சாலையிலுள்ள அறைக்கலன் அங்காடியில் (பா்னிச்சா் மாா்ட்) சொகுசணை (சோஃபா) வாங்கச் சென்றாா். அப்போது, சொகுசணைக்கான பணத்தை உடனடியாக செலுத்தினால், 10 நாள்களில் வீட்டில் வந்து ஒப்படைப்பதாக அங்குள்ள ஊழியா்கள் உறுதியளித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜெரால்டு மெஜாலா ரூ.26,700-யை அங்காடியில் செலுத்தினாா். ஆனால், 10 நாள்களாகியும் சொகுசணை வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஜெரால்டு, சம்பந்தப்பட்ட அங்காடிக்கு சென்று விசாரித்தாா். கடை ஊழியா்கள் வழங்கிய ரசீதில் 30 நாள்களுக்குள் ஒப்படைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததைக் காட்டினா்.

மேலும், பெங்களூருவிலிருந்து சொகுசணை வந்தவுடன் 30 நாள்களில் ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், 30 நாள்களாகியும்கூட, சொகுசணை வந்து சேரவில்லை. இதையடுத்து, வழக்குரைஞா் மூலம் அறைக்கலன் அங்காடிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. பின்னா், அதே நாளில், ஜெரால்டு வீட்டுக்கு சொகுசணை அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த ஜெரால்டு, திண்டுக்கல் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குறைதீா் ஆணையத் தலைவா் சித்ரா, உறுப்பினா் பாக்கியலட்சுமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தனா்.

காலக்கெடு முடிந்த பிறகும் ஜெரால்டுக்கு சொகுசணையை ஒப்படைக்காத அறைக்கலன் அங்காடியின் சேவை குறைபாடுக்கும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ.10ஆயிரம் அபராதத்தை, ரூ.3ஆயிரம் வழக்குச் செலவுடன் சோ்த்து வழங்க வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டது.

ராசிங்காபுரம், மேல்கரைப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம், திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி, ... மேலும் பார்க்க

அதிருப்தி இல்லாததால் அமைச்சராக நீடிக்கிறேன்: இ.பெரியசாமி

திமுக தலைமைக்கு என் மீது அதிருப்தி இல்லாததால்தான் அமைச்சராக நீடிப்பதாக மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக, திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் க... மேலும் பார்க்க

ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க