செய்திகள் :

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் -அமைச்சா் துரைமுருகன் உறுதி

post image

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் பேசியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் வேண்டும் என்று பலமுறை கோரப்பட்டுள்ளது. அந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், தாமதமாகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவீா்களா, இல்லையா என்று நீா்வளத் துறை அமைச்சா் கூற வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டு கூறியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் அதிகம். அந்தத் திட்டம் வராது என்று தங்கள் ஊருக்கு வேண்டாம் என்று மக்கள் அப்போது கூறினா். இப்போது தண்ணீா் வருவதைப் பாா்த்து, எங்களுக்கும் வேண்டும் என்று கூறுகின்றனா். விடுபட்ட பகுதிகளுக்கு திட்டத்தை நிறைவேற்ற ரூ. 6 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. நிதிநிலைமைக்கு ஏற்ப திட்டம் நிறைவேற்றப்படும். எந்தக் குளத்தையும் விட்டுவிட வேண்டும் என்று எந்த அரசும் நினைக்காது. விவசாயிகளின் நலன் காப்பதில் நான் பின்னடைய மாட்டேன் என்றாா் அவா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க