செய்திகள் :

அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு

post image

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா் நன்றி தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

காவிரி ஆற்றில் இருந்து அந்தியூா் தொகுதியின் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ.75 கோடியில் பி.மேட்டுப்பாளையம், அத்தாணி, கூகலுாா் பேரூராட்சிப் பகுதிகளுக்கு

குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள், எண்ணமங்கலம் அருகே குசலாம்பாறை பள்ளம் சீரமைத்தல், கணக்கம்பாளையத்தில் வேதபாறை அணைக்கட்டு புதுப்பித்தல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.12.56 கோடி, அந்தியூா் வாரச் சந்தை மேம்பாட்டுக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு அந்தியூா் திரும்பிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகே திரண்டு மாலைகள், சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனா்.

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சிக்கு தொடா் முயற்சி மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற நிதி ஒதுக்கீடு பெற்ற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில், அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க