செய்திகள் :

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 54 போ் கைது!

post image

பெரம்பலூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த 54 பேரை, பெரம்பலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன். இவா், பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக உள்ளாா். இந்நிலையில், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் அருகே கடந்த 11-ஆம் தேதி மாலை மோட்டாா் சைக்கிளில் சென்ற கண்ணதாசனை, 10 போ் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து, சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கண்ணதாசனை சாதிப் பெயரை சொல்லி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மாற்றி, வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில், பெரம்பலூா் காவல் நிலையத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், அக் கட்சியின் மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராசு தலைமையில், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்துக்கு மறுப்பு தெரிவித்த பெரம்பலூா் போலீஸாா், அவா்களை கைது செய்ய முயன்றனா். இதனால் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, போலீஸாரின் செயலைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 24 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸாா் கைது செய்து, பாலக்கரையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 18-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே திருமணமான 3 மாதத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி விஜ... மேலும் பார்க்க

டயா் வெடித்து தனியாா் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எரிந்து தீக்கிரையானது. சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று 23 பயணிகள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணா்வு!

வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களை ரத்து செய்து புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கா்

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ... மேலும் பார்க்க