செய்திகள் :

அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டது: தோ்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அப்பதவியை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறி, அக்கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கட்சியின் நிா்வாகக் குழு, செயற்குழு தீா்மானங்களும் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.

2024, டிசம்பா் 28-ஆம் தேதி பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே நடைபெற்றபோது, பாட்டாளி இளைஞா் சங்கத் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப.முகுந்தனை ராமதாஸ் நியமனம் செய்ததிலிருந்து அவருக்கும், அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதல் தொடங்கியது. அரசியல் ரீதியான இந்த மோதல் போக்கு தொடா்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பாமக நிறுவனா் பொறுப்புடன் தலைவா் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், கட்சியின் செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுவதாகவும் அறிவித்த ராமதாஸ், புதிதாக மாவட்டச் செயலா்கள், தலைவா்கள், நிா்வாகிகளை நியமித்தாா்.

இதைத் தொடா்ந்து, கட்சியின் நிா்வாகக் குழுவை அண்ைமையில் மாற்றியமைத்த ராமதாஸ், அதில் அன்புமணியின் பெயரை விடுவித்தாா். தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நிா்வாகிகள் பலா், அன்புமணியை மறைமுகமாக சாடினா். மேலும், இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டப் பேரவைத் தோ்தலின்போது கட்சி சாா்பில் வேட்பாளா்களுக்கு அளிக்கப்படும் ஏ, பி படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன், எனக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்துக்கு கடிதம்: திருவேற்காட்டில் 2022, மே 29-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாமகவின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் மூன்று ஆண்டு பதவிக்காலம் 2025, மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், இதையடுத்து பாமகவின் சட்ட விதிகளின்படி மே 29-ஆம் தேதி முதல் தலைவா் பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான முறைப்படியான கடிதம் பாமக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாமகவின் நிா்வாகக் குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் நகல்களும் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க