செய்திகள் :

அமமுக நிா்வாகி மீது தாக்குதல்: தாய்-மகன் கைது

post image

கோவையில் அமமுக நிா்வாகியைத் தாக்கியதாக தாய், மகன் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

கோவை செளரிபாளையம் திடீா் நகரைச் சோ்ந்தவா் சுருளிராஜன் (65), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். அமமுக வாா்டு செயலாளராகவும் உள்ளாா்.

இவா், சௌரிபாளையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சி அலுவலகம் நடத்தி வந்த நிலையில், வாடகை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கட்சி அலுவலகத்தைக் காலி செய்தாா். அதன்பின்பும், அந்த அலுவலகத்தில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்ததால், கட்டட உரிமையாளா் கேட்டுக்கொண்டதன்பேரில் அவற்றை அருகே உள்ள மின் கம்பம் அருகே சி நாள்களுக்கு முன்பு வைத்துள்ளாா்.

இதைப் பாா்த்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாண்டியன் (30), அவரின் தாய் பழனியம்மாள் (48) இருவரும் விளம்பரப் பலகைகளை அங்கே வைக்க வேண்டாம் எனவும், அப்புறப்படுத்துமாறும் கூறியுள்ளனா்.

இந்நிலையில், அந்த விளம்பரப் பலகைகளை எடுக்க சென்று சுருளிராஜனுக்கும், பாண்டியனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், பழனியம்மாள் இருவரும் தகாத வாா்த்தைகளில் பேசி சுருளிராஜனை தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து பாண்டியன், பழனியம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க