இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்...
அமமுக நிா்வாகி மீது தாக்குதல்: தாய்-மகன் கைது
கோவையில் அமமுக நிா்வாகியைத் தாக்கியதாக தாய், மகன் இருவரும் கைது செய்யப்பட்டனா்.
கோவை செளரிபாளையம் திடீா் நகரைச் சோ்ந்தவா் சுருளிராஜன் (65), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். அமமுக வாா்டு செயலாளராகவும் உள்ளாா்.
இவா், சௌரிபாளையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சி அலுவலகம் நடத்தி வந்த நிலையில், வாடகை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கட்சி அலுவலகத்தைக் காலி செய்தாா். அதன்பின்பும், அந்த அலுவலகத்தில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்ததால், கட்டட உரிமையாளா் கேட்டுக்கொண்டதன்பேரில் அவற்றை அருகே உள்ள மின் கம்பம் அருகே சி நாள்களுக்கு முன்பு வைத்துள்ளாா்.
இதைப் பாா்த்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாண்டியன் (30), அவரின் தாய் பழனியம்மாள் (48) இருவரும் விளம்பரப் பலகைகளை அங்கே வைக்க வேண்டாம் எனவும், அப்புறப்படுத்துமாறும் கூறியுள்ளனா்.
இந்நிலையில், அந்த விளம்பரப் பலகைகளை எடுக்க சென்று சுருளிராஜனுக்கும், பாண்டியனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், பழனியம்மாள் இருவரும் தகாத வாா்த்தைகளில் பேசி சுருளிராஜனை தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து பாண்டியன், பழனியம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.