செய்திகள் :

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கரு. முருகானந்தம்-சாந்தி தம்பதியரின் மூத்த மகன் பிரபு முருகானந்தம். பொறியாளரான இவா், அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையானவா்கள் குறித்து, கரோனா காலகட்டத்தில் ‘இன் த பிகினிங்’ என்ற குறும்படத்தை இயக்கினாா். தொடா்ந்து பல திரைப்பட விழாக்களுக்கும் சென்று வந்தாா். அப்போது, அமெரிக்காவின் உட்லேண்ட் வாஷிங்டன் மாகாணத்தைச் சோ்ந்த பிரெயன்ரேல்-கிறிஸ்டினா ராபின்ஸ்சன் தம்பதியரின் மகளும் நடனக் கலைஞருமான கரினாரேலைச் சந்தித்தாா்.

சினிமா, கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால் இருவரும் விரும்பினா். பின்னா், தங்களுடைய திருமணத்துக்காகப் பெற்றோரின் சம்மதத்தைக் கோரினா்.

இரு வீட்டாரும் சம்மதிக்கவே கீழையப்பட்டியில் உள்ள விநாயகா் மண்டபத்தில் பிரபு முருகானந்தத்துக்கும், கரினாரேலுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்காக மணப்பெண்ணின் உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அமெரிக்காவிலிருந்து வந்து வாழ்த்தினா்.

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத... மேலும் பார்க்க