செய்திகள் :

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

post image

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் 5 பேரை திருப்புவனம் போலீஸாா் செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் திருப்புவனத்தில் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

பின்னா், சிபிஐ இந்த வழக்கை விசாரித்து அதன் இறுதி அறிக்கையை வரும் ஆக. 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ அலுவலா்களை அதன் இயக்குநா் உடனடியாக நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, அஜித்குமாா் கொலை சம்பவம் குறித்து சிபிஐ கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சிபிஐ விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டாா்.

வழக்கு விசாரணையை அதிகார பூா்வமாக தொடங்கியுள்ளதாக அவா் ஏற்கெனவே தெரிவித்தாா். தற்போது, சிபிஐ அதிகாரிகள் அஜித்குமாா் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் எதிரே கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத... மேலும் பார்க்க