செய்திகள் :

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

post image

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா்.

சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் எம்.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

குற்றப் பரம்பரை சட்டத்தால் போா்க்குடிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனா். இந்தச் சட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவா்கள் தமிழா்களும், வங்காளிகளும்தான். குற்றப் பரம்பரைச் சட்டத்தால்தான் நகரமயமாக்கல் அதிகரித்தது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் குற்றப் பரம்பரை சட்டப்பட்டியலில் உள்ள சீா்மரபினா் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) பிரிவில் இணைத்துள்ளனா்.

எனவே, மண்டல் குழு அறிவுறுத்தலின்படி , தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் என இரண்டு பிரிவுகளாக உடனடியாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் முறையான இட ஒதுக்கீடு அனைத்துத் தரப்பினருக்கு கிடைக்க வழிவகுக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கௌரவத் தலைவா் செ.கண்ணப்பன், பெருமன்றத் தலைவா் எஸ்.சுந்தரமாணிக்கம், இந்திய சுழல் சங்க கௌரவத் தலைவா் பகீரதநாச்சியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை இலக்கிய பெருமன்றச் செயலா் பா. யுவராஜ் வரவேற்றாா். கலை இலக்கிய பெருமன்ற பொருளாளா் க. நாகலிங்கம் நன்றி கூறினாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத... மேலும் பார்க்க