செய்திகள் :

அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?

post image

அமெரிக்க வெளியுறவுத்துறை அந்த நாட்டில் தங்கிப் படிக்கும் 6000 மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. சட்டத்தை மீறியதாகவும், தேவைக்கு அதிகமான காலம் தங்கியிருப்பதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, மோதலில் ஈடுபட்டது, திருட்டு மற்றும் தீவிரவாத ஆதரவு உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

VIsa
VIsa

அதிபர் ட்ரம்ப் பதவியேற்றது முதலே குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதை எதிர்க்கிறார். அதன் பகுதியாகவே இந்த நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.

மாணவர்களை வெளியேற்ற 'தீவிரவாத ஆதரவு' எனக் கூறப்படும் காரணத்தை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தவில்லை. எனினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் 'யூத எதிர்ப்பு' நடத்தைக் கொண்டவர்களென அமெரிக்க அரசு கூறுகிறது.

Trump
Trump

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 6000 விசாக்களில் 4000 பேர் சட்டத்தை மீறியிருப்பதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 200-300 விசாக்கள் குடியுரிமைச் சட்டம் 3B அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் 'தீவிரவாத செயல்பாடுகளில்' ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் வீசா பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஜூன் மாதம் மீண்டும் அனுமதிக்கப்பட்டபோது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக குடியேறும் மாணவர்கள் அரசு கண்காணிப்பதற்கு ஏதுவாக அவர்களது சமூக வலைத்தளங்களை 'பொது நிலையில்' வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த விசா ரத்தினால் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பான ஓபன் டோர்ஸ் கூற்றுப்படி, 2023-24 கல்வியாண்டில் 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்கக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 3.3 லட்சம் மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அனுமானிக்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

CPI: 'மாநிலச் செயலாளராக முத்தரசன் தொடர்வாரா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

கடந்த மூன்று தினங்களாக சேலத்தில் நடந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த மாநா... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: "முதல்வர் ஸ்டாலினிடம் பேசிட்டு சொல்றேன்" - கமல்ஹாசன் சொல்வது என்ன?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ... மேலும் பார்க்க

Sanitary Workers: 'தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?' - திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்... மேலும் பார்க்க

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெ... மேலும் பார்க்க

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க