செய்திகள் :

புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

post image

புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது.

அறிவிப்புப் பலகை
அறிவிப்புப் பலகை

அதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக்கினால் அதற்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் சாப்பாட்டை வீணாக்கக்கூடாது என்பதற்காக இது போன்ற ஒரு திட்டத்தை அறிவித்து இருப்பதாக உணவகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதிவு ட்விட்டர் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் பலரும் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

புனே சதாசிவ் பேட் பகுதியில் செயல்படும் துர்வாங்குர் உணவகத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகமான நெட்டிசன்கள் உணவகத்தின் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். இது போன்ற திட்டத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் சாப்பாட்டைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைப்பது நியாயமில்லை என்றும், சாப்பாடு சுவையாக இல்லாவிட்டால் எப்படிச் சாப்பிட முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

வேறு சில நெட்டிசன்கள் இத்திட்டம் மிகவும் அருமையானது என்று புகழ்ந்துள்ளனர். ஒரு சில படங்களில் இது போன்று உணவகத்தில் உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறுவதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறையில் இப்போதுதான் அதனைக் காண முடிவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இ... மேலும் பார்க்க

'அதிகமா உதவறவுங்க 'அங்க'தான் இருக்காங்க'- டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த யூடியூபர்ஸ் பகிர்வு

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகஇந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள்.கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறி... மேலும் பார்க்க

``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழிலதிபர் விரக்தி ஏன்?

ரூ.12 கோடி இழந்த தொழிலதிபர் எத்தனையோ பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர். அப்படி இழந்தவர்களில் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். ஏராளமானோர் பண ஆசையில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விள... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் கனமழை; சுரங்க சாலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்: நீந்தி உயிர் தப்பிய இருவர்

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று காலை... மேலும் பார்க்க

குறைந்த மதிப்பெண்; பெற்றோருக்கு பயந்து மும்பை கிளம்பிய கர்நாடக சிறுமிகள் - மீட்டது எப்படி?

நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்... மேலும் பார்க்க

தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ர... மேலும் பார்க்க