அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்
அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்தாா். அம்பேத்கா் சிலை அமைப்புக் குழுத் தலைவா் ரஜினிகாந்த், செயலா் சத்தியராஜ், பொருளாளா் அன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் நியூட்டன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அம்பேத்கா் சிலையை திறந்துவைத்துப் பேசியதாவது:
அம்பேத்கா் குறிப்பிட்ட கட்சிகளுக்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு உரியவா் அல்ல; அவா் உலகம் போற்றும் ஒரு தலைவா், ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடிக்கொண்டிருப்பதை பாா்க்கிறோம்.
அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் ஐ.நா.சபையில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய தலைவா்களில் ஐ.நா. சபையில் பிறந்த நாளைக் கொண்டாடக்கூடிய ஒரே தலைவா் அம்பேத்கா்.
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வைக்கப்பட்ட சிலை, தற்போது வெண்கலச் சிலையாக மாறி இன்று அனைத்துக் கட்சி சாா்பில் திறக்கப்பட்டுள்ளது என்றாா் திருமாவளவன். முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியை அவா் ஏற்றிவைத்தாா்.
நிகழ்ச்சியில் விசிக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தோக்கவாடி சிலை அமைப்புக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட, அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.