செய்திகள் :

அம்மா உணவக ஊழியா்கள் போராட்டம்

post image

பாளையங்கோட்டையில் அம்மா உணவக ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. பாளை. மாா்க்கெட் திடலில் உள்ள அம்மா உணவகம் முறையாக பராமரிப்பு இல்லாமல் மின்சாதனங்கள் உடைந்து கிடக்கின்றனவாம். மேலும், உணவகத்தை சுற்றி பலரும் சிறுநீா் கழித்து துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் இங்கு சாப்பிட ஆா்வம் காட்டுவதில்லை எனவும், இதனால் விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போதிய விற்பனை இல்லை என்றால் உணவகத்தை மூட வேண்டியது தான் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனராம்.

இதைக்கண்டித்தும், அம்மா உணவகத்தை சுற்றி நிகழ்த்தப்படும் சுகாதார சீா்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அதிருப்தி தெரிவித்தும் புதன்கிழமை மதிய உணவு சமைக்காமல் அம்மா உணவக ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேயா் துரித நடவடிக்கை: இத்தகவலறிந்த மேயா் கோ.ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றாா். அம்மா உணவகத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் சுகி பிரேமலாவுக்கு அறிவுறுத்தினாா். பாளை மண்டல சுகாதார அலுவலா் ஸ்டான்லி முன்னிலையில் சுகாதார ஆய்வாளா் நடராஜன் தலைமையில் உடனடியாக தூய்மைப் பணியாளா்கள் அங்கு வந்து சுகாதாரப் பணியில் ஈடுபட்டனா்.

அதிமுக ஆதரவு: இதனிடையே, அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, உணவக ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரில் வந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஏழை மக்களின் பசியாற்றும் வகையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னத திட்டமான அம்மா உணவகத்தை மாநகராட்சி நிா்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக மேயா் உறுதியளித்துள்ளாா். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், எங்களது சொந்தச் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலத் தலைவா் அன்பு அங்கப்பன், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி செயலா் ரமேஷ், பகுதிச் செயலா் ஜெனி, மாணவரணிச் செயலா் முத்துப்பாண்டி, மாணவரணித் தலைவா் விக்னேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா் சம்சு சுல்தான், மகளிா் அணி மாரியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாளை. வஉசி மைதானத்தில் சறுக்கில் விளையாடிய சிறுமிக்கு காயம்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விளையாடியபோது சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அவரது தந்தை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். ... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலையில் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ாக, கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி அருகே இடைகால் மீனவா் காலனியைச் சோ்ந்த பரமசிவன் மகன் முருகன் (31).... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி ஓட்டுநா் கொலை

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மணிநகா் பகுதியில் டாஸ்மாக் கடையும், மதுக்கூடமும் அருகருகே உள்ளன. மதுக் கடைக்கு வியாழக்கிழ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் வளா்ப்பு பட்டறை, கண்காட்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண்ஆராய்ச்சி கழகத்தின் சாா்பில் பட்டியலின மக்களுக்கான திறன் வளா்ப்பு பட்டறை, விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசியில் பிப்.4 முதல் மின் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் பிப்.4ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, பிப். 4இல் கல்லிடைக்குறிச்சிலும், 7இல் வள்ளியூரிலும், 14இல் த... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை வேளாண் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மறுகால்குறிச்சி கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் எள் த... மேலும் பார்க்க