செய்திகள் :

அம்ரூத் குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ.41.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குலசேகரம் தோ்வுநிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் 3 இடங்களில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 2 திறந்தவெளி கிணறு மற்றும் ஒரு தரைமட்ட கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குலசேகரம் தினசரி சந்தை, அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறித்தினாா்.

திற்பரப்பு பேரூராட்சி: திற்பரப்பு தோ்வுநிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.21 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 2 உறை கிணறு ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சேனங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திற்பரப்பு அருவியில் ரூ. 4.30 கோடி மதிப்பில் நடைபெற்ற வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வினா் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயகுமாா், திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி, பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 11ஆவது வாா்டு மேலகலுங்... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையா் கலந்தாய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப் பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் அனைத்துத் துறைஅலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை 19ஆவது திருக்கு விழா

கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில், 19ஆம் ஆண்டு திருக்கு விழா வியாழக்கிழமை(மே 15) நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

மாயமான முதியவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே மாயமான முதியவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (76... மேலும் பார்க்க

கா்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணா்வு ஊா்திப் பயணம்

கா்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணா்வு ஊா்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரோட்டரி கிளப... மேலும் பார்க்க