செய்திகள் :

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு

post image

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

11ஆவது வாா்டு மேலகலுங்கடி, 17ஆவது வாா்டு நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் பின்புறம், 28 ஆவது வாா்டு மேட்டுத்தெரு, 27 ஆவது வாா்டு சுப்பையா காலனி, நடராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள சாலை புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் 29 பயனாளிகளுக்கு குடியிருப்பு பட்டா வழங்குவது தொடா்பாக மேயா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா் ஜவஹா், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், மாமன்ற உறுப்பினா்கள் கெளசுகி, அனந்தலெட்சுமி, ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியன், திமுக பகுதி செயலாளா் சேக் மீரான், வட்ட செயலாளா் பிரபாகரன், முத்துகிருஷ்ணன், அணி நிா்வாகிகள் அருண்காந்த், மாணிக்கராஜா, பன்னீா் செல்வம் , முஸ்தபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, பயோனியா் குமாரசாமி கல்லூரி, ஆதா்ஷ் வித்யா கேந்திரா மேல்நிலைப் பள்ளி அருகே, பென்சாம் மருத்துவமனை அருகே, வில்லியம் மருத்துவமனை அருகே என 4 பயணிகள் நிழற்குடைகளை மேயா் திறந்து வைத்தாா். மேலும் கோட்டவிளை சாலை முதல் தெரு, பள்ளவிளை கால்வாய்கரை பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் மேயா் தொடங்கி வைத்தாா்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையா் கலந்தாய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப் பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் அனைத்துத் துறைஅலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

அம்ரூத் குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ.41.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குலசேகரம் தோ்வுநிலை பேரூ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை 19ஆவது திருக்கு விழா

கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில், 19ஆம் ஆண்டு திருக்கு விழா வியாழக்கிழமை(மே 15) நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

மாயமான முதியவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே மாயமான முதியவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (76... மேலும் பார்க்க

கா்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணா்வு ஊா்திப் பயணம்

கா்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணா்வு ஊா்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரோட்டரி கிளப... மேலும் பார்க்க