செய்திகள் :

அரசின் திட்டங்கள்-சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி வேண்டுகோள்

post image

அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா். இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 4.76 லட்சம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றில், 53.74 லட்சம் போ் உறுப்பினா்களாக இருக்கின்றனா். தமிழ்நாட்டு மகளிரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக ஒரு மாபெரும் இயக்கமாக சுய உதவிக் குழுக்கள் திகழ்கின்றன. மகளிா் சுய உதவிக் குழுவினரை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவா்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இப்போது ஒவ்வோா் ஆண்டும் எங்களுக்கு ஓா் இலக்கு கொடுத்து, அந்தக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த இலக்கு ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரே நாளில் ரூ.3,130 கோடி: இந்த விழாவின் மூலமாக மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3.76 லட்சம் பயனனாளிகளுக்கு ரூ.3,130 கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.05 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இதுவரை எந்த அரசைக் காட்டிலும் ‘திராவிட மாடல்’ அரசு முழுக்க, முழுக்க மகளிருக்கான அரசாக இயங்கி வருகிறது.

மகளிா் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் நல்லாட்சி இன்னும் பல ஆண்டுகள் தொடா்ந்திட ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும். அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்தையும் மக்களிடம் சுயஉதவிக் குழுவினா் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.

மணிமேகலை விருதை தருமபுரி சக்தி மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த விஜயலட்சுமி, கரூா் மாவட்டம் கீதம் மகளிா் குழுவைச் சோ்ந்த சரண்யா ஆகியோா் பெற்றனா். காணொலி காட்சி வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுபட்டோருக்கு உரிமைத் தொகை எப்போது?

இந்த நிகழ்வில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு துணை முதல்வா் அளித்த பதில்:

விடுபட்ட மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அதற்கான விவரங்கள் வெளியிடப்படும். கடந்த முறை எப்படி பயனாளிகள் சோ்க்கப்பட்டனரோ அதேபோன்று விடுபட்டோரும் முறையாகச் சோ்க்கப்படுவா் என்றாா் அவா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னையில் இரண்... மேலும் பார்க்க

இளைய காமராசர் என அழைக்க வேண்டாம்: விஜய்

தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக ... மேலும் பார்க்க

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க