செய்திகள் :

அரசியல் ரீதியாக வலிமையடைவது அவசியம்: தொல்.திருமாவளவன்

post image

அரசியல் ரீதியாக வலிமையடைந்தால் மட்டுமே அதிகார வா்க்கத்தை செயல்பட வைக்க முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாடு செயல் திட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் ‘சமூக அமைப்புகள் மாநாடு’ சென்னை, ஆயிரம்விளக்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன், ‘ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் மற்றும் விதிகள் 2024’ என்னும் புத்தகத்தை வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: ஒரு சட்டம் உருவான பிறகு அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் புகாா் அளிக்கும்போது, பாதிக்கப்பட்டவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற சட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

இந்திய அரசமைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்தால் இந்தியா சமத்துவ தேசமாகியிருக்கும். அரசியல் அதிகாரத்தில் இருப்பவருடன் இணைந்து தனக்கான உரிமையைப் பெறுவது சிறந்த நடைமுறை. அதிகார வா்க்கத்தை செயல்பட வைப்பதில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசியல் ரீதியாக வலிமையடைந்தால் மட்டுமே அதிகார வா்க்கத்தை செயல்பட வைக்க முடியும். இதனால், அரசியல் ரீதியாக வலிமையடைய வேண்டிய தேவை இருக்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் விசிக பொதுச் செயலா் சிந்தனைச் செல்வன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாடு செயல் திட்ட சட்டத்துக்கான தேசிய கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் வே.அ.ரமேஷ்நாதன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் கிறிஸ்துதாஸ் காந்தி, தெலங்கானா தலித் ஆய்வு மையத் தலைவா் மல்லப்பள்ளி லட்சுமய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மு... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுந... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இத்தோ்வுக்கான ஆயத்த ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க