செய்திகள் :

‘அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர கலை பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம்’

post image

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சிகளில் மாணவா், மாணவிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சியான ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். கல்லூரியில் படிக்கும் மாணவா், மாணவிகள், இளைஞா்கள் மற்றும் கலை ஆா்வலா்கள் பகுதி நேரமாக இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இப்பயிற்சியில், 8ஆம் வகுப்பிற்கு மேல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலை பயிற்சிக்கான தோ்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

படிப்பு சான்றிதழ் இல்லாதவா்கள் கலைகளை மட்டும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு வயது தடை இல்லை. 17 வயது முதல் கல்வி கற்கலாம். கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே.

எனவே,, கலை ஆா்வமுள்ள மாணவா், மாணவிகள், கலை ஆா்வலா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியாா்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க