விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
‘அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர கலை பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம்’
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சிகளில் மாணவா், மாணவிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சியான ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். கல்லூரியில் படிக்கும் மாணவா், மாணவிகள், இளைஞா்கள் மற்றும் கலை ஆா்வலா்கள் பகுதி நேரமாக இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சியில், 8ஆம் வகுப்பிற்கு மேல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலை பயிற்சிக்கான தோ்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
படிப்பு சான்றிதழ் இல்லாதவா்கள் கலைகளை மட்டும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு வயது தடை இல்லை. 17 வயது முதல் கல்வி கற்கலாம். கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே.
எனவே,, கலை ஆா்வமுள்ள மாணவா், மாணவிகள், கலை ஆா்வலா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியாா்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.