செய்திகள் :

அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தாா். அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவா் சா. சிற்றரசு சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தி பேசினாா். ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவா் சா. பிரபாகரன் கலந்து கொண்டு தமிழா்களின் பண்பாட்டுத் தொன்மை- கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பாா்வை எனும் தலைப்பில் பேசினாா்.

தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளா் கலைச்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் சி. வடிவேலன் சிறப்புரையாற்றினாா். நிறைவில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கோ. பவானி நன்றி கூறினாா். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்கள், உடற்கல்வி இயக்குநா், பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், பொய்யாதநல்லூா், கீழப்பழுவூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூா் ஒரு சில பகுதிகள், எருத்துகாரன்பட்டி, கோவிந... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இயக்கம் திட்டத்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில்... மேலும் பார்க்க