செய்திகள் :

அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் கொடுமை: 5 மாணவர்கள் கைது!

post image

கேரளத்தில் அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த மாணவர்கள் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு செவிலியர் கல்லூரியில் கடந்த 3 மாதங்களாக தங்களுக்குத் தொடர்ந்து ராகிங் கொடுமை நடப்பதாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் காவல்துறையில் புகாரளித்தனர்.

இதில், கடந்த நவம்பர் மாதம் முதல் தங்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் நிர்வாணமாக நிற்கவைத்து உடற்பயிற்சி செய்யும் டம்பிள்களை வைத்து தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க| கும்பமேளா பயணிகள் பேருந்து விபத்து: 30 பேர் காயம்!

மேலும், காம்பஸ் மற்றும் கத்தி போன்றவற்றால் தங்களை குத்திக் காயப்படுத்தியதாகவும் முகம், தலை, வாய் முழுக்க க்ரீம் தடவி கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த மாணவர்களின் உடலில் காயம் ஏற்பட்ட தழும்புகள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி மது அருந்துவதற்காக ஜூனியர் மாணவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்து அடித்து துன்புறுத்தி வந்தனர்.

இந்தக் கொடுமைகளை மேலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் காவல்துறையில் புகாரளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேரும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோட்டயம் பகுதி காவல்துறையினர் 5 மாணவர்களை இன்று கைது செய்தனர்.

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தி... மேலும் பார்க்க

மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!

மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே ச... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் பார்க்க

பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!

ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாகப் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை பெரிதளவில் செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.கரோனா பேரிடர் காலத்தில் தகவல் தொழில்நுட்பத... மேலும் பார்க்க

கும்பமேளா பயணிகள் பேருந்து விபத்து: 30 பேர் காயம்!

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகத்கரில் உள்ள கோசெலாவ் பகுதியைச் சேர்ந்த பயணிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பஞ்... மேலும் பார்க்க

புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7

புணேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளத... மேலும் பார்க்க