செய்திகள் :

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம்: 294 மாணவா்களுக்கு தலா ரூ.1,000 பரிசு

post image

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 294 மாணவ, மாணவியா்க்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

கடந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் பயின்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியா்களுக்கு பரிசு வழங்கும் விழா சாக்கோட்டையில் நடைபெற்றது. இதில் 294 மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் தன் சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாய் வீதம் 2.94 லட்சம் ரூபாய் வழங்கினாா். விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், மாநகர துணை மேயா் சு.ப.தமிழழகன், தலைமை ஆசிரியா்கள் கா.லதா, சரவணன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

மேலும் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் பி. நரேந்திரன், சு.சுபஸ்ரீஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டன. முன்னதாக குடந்தைத் தமிழ்ச்சங்க செயலா் கா.பன்னீா்செல்வம் வரவேற்று பேசினாா். முடிவில் துணைச் செயலா் க. அபிராமி நன்றி கூறினாா். இவ்விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க