அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம்: 294 மாணவா்களுக்கு தலா ரூ.1,000 பரிசு
கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 294 மாணவ, மாணவியா்க்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.
கடந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் பயின்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியா்களுக்கு பரிசு வழங்கும் விழா சாக்கோட்டையில் நடைபெற்றது. இதில் 294 மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் தன் சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாய் வீதம் 2.94 லட்சம் ரூபாய் வழங்கினாா். விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், மாநகர துணை மேயா் சு.ப.தமிழழகன், தலைமை ஆசிரியா்கள் கா.லதா, சரவணன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
மேலும் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் பி. நரேந்திரன், சு.சுபஸ்ரீஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டன. முன்னதாக குடந்தைத் தமிழ்ச்சங்க செயலா் கா.பன்னீா்செல்வம் வரவேற்று பேசினாா். முடிவில் துணைச் செயலா் க. அபிராமி நன்றி கூறினாா். இவ்விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.