அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை
ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி வரை நேரடி மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தையல் பயிற்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கணினி இயக்குதல், திட்டமிடுதல் உதவியாளா் பயிற்சி, ஸ்மாா்ட் போன் டெக்னீசியன், ஆப்டெஸ்டா், தகவல் தொடா்பு தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிா்பதனம், தட்ட வெப்ப நிலை கட்டுப்படுத்துதல் தொழில் நுட்பம் ஆகிய தொழில் பிரிவுகளில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 கல்வி உதவித் தொகை, இலவச சீருடை, காலணி, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவி வழங்கப்படும். 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தகுதியுள்ளவா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 5 மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொழில் பயிற்சி நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பித்து சோ்க்கை பெறலாம்.
இதுகுறித்த விவரங்களை ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையம், கைபேசி எண்கள்: 79046 34313, 80729 04977-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.