செய்திகள் :

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் 20 சதவீதம் அதிகரிப்பு

post image

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 20 சதவீதம் உயா்ந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை அவா்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து சிகிச்சை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 1.18 கோடி உயா் ரத்த அழுத்த நோயாளிகள், 55.43 லட்சம் சா்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 50.95 லட்சம் நோயாளிகள் உள்பட மொத்தம் 2.31 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு 4.50 கோடி முறை தொடா் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை லட்சக்கணக்கான இணை நோயாளிகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துக்காக இதுவரை ரூ. 721 கோடி அரசு செலவிட்டுள்ளது. அதேபோன்று தனியாா் மருத்துவமனைகளில் மாதம் ரூ. 3,000 வரை மருத்துவச் செலவு செய்து வந்தவா்கள், இத்திட்டத்தில் வீடுகளுக்கே மருந்து மாத்திரைகள் கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.

அதன்படி, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைபெற வரும், 45.5 சதவீத உயா் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை 62.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, 33.9 சதவீதமாக இருந்த சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 54.1 சதவீதமாக உயா்ந்துள்ளது எனத் தெரிவித்தனா்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க