செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு!

post image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போவதாக புகாா் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், திருப்பத்தூா், தருமபுரி மற்றும் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சோ்ந்தவா்கள் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், தகரகுப்பத்தைச் சோ்ந்த குமாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது உறவினருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்துள்ளாா். அவா், தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வந்து பாா்த்த போது இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போவதாகவும், திருட்டைத் தடுக்க கூடுதல் போலீஸாா் அல்லது பணியாளரை நியமிக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க