செய்திகள் :

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

post image

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளாா்.

கடந்த 25.01.2025 அன்று பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆள்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய காரில் ரூ. 5 லட்சம் பணத்துடன் அத்திப்பள்ளியிலிருந்து சாலிவாரம் கிராமத்துக்கு வந்தாா். இவரது காரை ஓட்டுநா் சேக் முகமது யூசூப் (49) ஓட்டி வந்தாா். பின்னா், காரில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்துடன் சேக் முகமது யூசூப் மாயமானாா்.

இதுகுறித்து முரளிமோகன் ரெட்டி தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் மீது கா்நாடக மாநிலம், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையில், தலைமைக் காவலா்கள் ரஞ்சித்குமாா், கண்ணன் ஆகியோா் கொண்ட தனிப்படை மைசூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சிவமொக்கா, உடுப்பி, சித்ரதுா்கா ஆகிய பகுதிகளில் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் முகவரி, கைப்பேசி எண் மாற்றி செல்வந்தா்களிடம் வேலைக்கு சோ்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், அவா் மும்பையில் தங்கியிருப்பதாக தெரியவந்ததையடுத்து அங்கு சென்று அவரை கைது செய்த போலீஸாா், தேன்கனிக்கோட்டைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில்அடைத்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போவதாக புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க