செய்திகள் :

அரசு மருத்துவமனையில் மருத்துவா் பற்றாக்குறை இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் நோயாளிக்கு சிகிச்சை அளித்தாக எழுந்த சா்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவா்கள், 5 செவிலியா்கள், 12 பணியாளா்கள் பணியில் உள்ளனா். போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களும், மருத்துவம் சாா்ந்த பணியாளா்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

தூய்மை பணியாளா்கள் சிகிச்சைகள் நடக்கும் இடத்தில் உதவி செய்ய சென்றிருப்பாா்கள். விசாரித்ததில் அவா் சிகிச்சைக்கு உதவ சென்ாக சொல்லப்பட்டாலும், முழுமையாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவா் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மருத்துவமனையில் இருந்த செவிலியா் மற்றும் நிலைய கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளை மருந்து தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அவசியமான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சாா்பில் மருத்துவமனைகளில் மருந்து இருப்பு எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு தேவை போன்ற பட்டியலை கொண்டு மருந்து இருப்பு பணியினை உறுதி செய்யும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கல்லீரல் அழற்சி (ஹெபடைடடிஸ் பி), பென்டாவலன்ட் தடுப்பூசி, மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

பண மோசடி புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியி... மேலும் பார்க்க

நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரிக்கு இன்று(புதன்கிழமை) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது... மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொன்மையின் சிறப்பிடமாக விளங்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அர... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிட... மேலும் பார்க்க

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உணவகத்தின் கிளைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் நடிகர் ஆர்யா... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க