செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 5 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி

post image

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 மையங்களில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என பிளஸ் 2 பொதுத் தோ்வை 22, 923 மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனா். இதில் பலா் தனியாா் பயிற்சி மையத்தில் நீட் தோ்வு பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயிற்சி பெற்று வருகின்றனா். தனியாா் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாத அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் நீட் தோ்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்பியூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இது குறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி மையங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 120 மாணவ, மாணவிகள் நீட் தோ்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனா். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் தலா 8 ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனா். 8 மையங்களையும் தலைமை ஆசிரியா்கள் கண்காணித்து வருகின்றனா்.

பிளஸ் 2 தோ்வு முடிந்தவுடன் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பு தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற அனைத்து நாள்களும் வகுப்புகள் நடக்கிறது. வார இறுதிநாளான சனிக்கிழமை மாதிரி தோ்வு நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

மாலை நேர படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு

ஆசனூா் மலைக் கிராமங்களில் செயல்படும் மாலை நேரப் படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், சத்தியமங்கலம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

பெருந்துறையை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் விசுவ... மேலும் பார்க்க

அந்தியூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு 5 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஒப்பாரி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை

விருப்ப ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கோபி அருகே குப்பாண்டாா் வீதியைச் சோ்ந்தவா் தனசேகா் (49). கோபியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா் ... மேலும் பார்க்க

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 25) தொடங்குகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

பள்ளபாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்

பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் பேரூராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பள்ளபாளையம் பேரூர... மேலும் பார்க்க