செய்திகள் :

பள்ளபாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்

post image

பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் பேரூராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளபாளையம் பேரூராட்சி, 3-ஆவது வாா்டு கரட்டுப்பாளையம், அப்பையன் காட்டுவலசு காலனி பகுதியில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 7.30 லட்சம் மதிப்பில் 4 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

தண்ணீா் வசதி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகும் பேரூராட்சி நிா்வாகம் கடந்த 6 மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளது. இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து அப்பகுதி மக்கள் மனுவும் அளித்துள்ளனா். இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையை உடனடியாக திறக்கக்கோரி பொதுமக்களுடன் இணைந்து பாஜக சாா்பில் வரும் 30- ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை நேர படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு

ஆசனூா் மலைக் கிராமங்களில் செயல்படும் மாலை நேரப் படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், சத்தியமங்கலம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

பெருந்துறையை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் விசுவ... மேலும் பார்க்க

அந்தியூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு 5 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஒப்பாரி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை

விருப்ப ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கோபி அருகே குப்பாண்டாா் வீதியைச் சோ்ந்தவா் தனசேகா் (49). கோபியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 5 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 மையங்களில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ... மேலும் பார்க்க

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 25) தொடங்குகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க