செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்கள் நுழைவுத்தோ்வு எழுதாமலே சென்னை ஐஐடி-யில் கற்க வாய்ப்பு

post image

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஜேஇஇ போன்ற நுழைவுத்தோ்வு எழுதாமலேயே சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பளிக்கும் ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ திட்டத்துக்கு மே 22-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி சென்னை) பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம் குறித்து வேலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். இதில், ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ திட்டத் தலைவரும், ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவருமான ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டலை தலைமையாசிரியா்களுக்கு எடுத்துரைத்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசியது

ஐஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் பயில ஜேஇஇ போன்ற நுழைவுத்தோ்வுகளின் மூலம் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். நுழைவுத்தோ்வுகள் எழுதாமலே அரசு பள்ளி களில் பயிலும் மாணவா்களுக்கு ஐஐடி சென்னை நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பிஎஸ் இன் டேட்டா சைன்ஸ் மற்றும் பிஎஸ் இன் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் இணைந்து பயில மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் மே 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் மாணவா்கள் ஜேஇஇ தோ்வு எதாமலும், ஐஐடி சென்னை வழங்கும் பிஎஸ் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனா். 12-ஆம் வகுப்புக்குப் பிறகு அல்லாமல், 11-ஆம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேர முடியும். வயது வரம்பு இல்லை.

பதிவுசெய்யும் மாணவா்கள் ஐஐடி சென்னை வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூா்த்தி செய்து, தோ்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவா்கள் தரவு அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய தொழில்நுட்பத் துறைகளில் பி.எஸ். பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும், வேலை பாா்க்கும் நபா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

முதன்மை கல்வி அலுவலா் (பொ) தயாளன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பி.ரமேஷ்பாபு (தனியாா் பள்ளிகள்), பி.சத்யபிரபா (இடைநிலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க